நேருக்கு நேர் மோத விருந்த இரண்டு புகையிரந்தங்களையும் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!

0
525
Officers stopped two train wrecks

{ Officers stopped two train wrecks }
இன்று காலை இடம்பெறவிருந்த பாரிய விபத்தொன்றை தொடரூந்து நிலைய அதிபர்கள் மற்றும் அதிகாரிகளும் இணைந்து தடுத்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

மேலும், அநுராதபுரம் – ஸ்வஸ்திபுர தொடரூந்து நிலையத்தில் இரண்டு தொடரூந்துகள்;ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் பயணித்துள்ளன.

இந்நிலையில், தொடரூந்து நிலைய அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் இதனை அவதானித்துள்ள நிலையில், இடம்பெறவிருந்த இந்த விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து அநுராதபுரத்திற்கு பயணித்த கடுகதி தொடரூந்தும், தலை மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்துமே இவ்வாறு ஒரே தண்டவாளத்தில் பயணித்துள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

தொடரூந்து சமிக்ஞைகள் உரிய முறையில் செயற்படாமை காரணமாக இந்த விபத்து நிகழவிருந்ததாக ஸ்வஸ்திபுர தொடரூந்து நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags: Officers stopped two train wrecks

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites