இலங்கை உள்ளிட்ட அகதிகளுக்கு இரக்கம் காட்டக்கூடாது; அவுஸ்திரேலியா

0
713
Australia comment Sri Lankan refugees

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து படகு மூலம் செல்கின்ற அகதிகளுக்கு இரக்கம் காட்டக் கூடாது என அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்துள்ளார். (Australia comment Sri Lankan refugees)

இவ்வாறு வருபவர்களுக்கு இரக்கம் காட்டும் பட்சத்தில் மீண்டும் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து, அகதிகள் அவுஸ்திரேலியா நோக்கி பிரவேசிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் 132 இலங்கை அகதிகளை ஏற்றிய படகு ஒன்று அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கும் வழியில் இடைநிறுத்தப்பட்டது.

இந்தோனேசியாவில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள், அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்வதற்கு காத்திருக்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில், மானஸ்தீவில் உள்ள 20 அகதிகளுக்கு இரக்கம் காட்டி அவர்களை அவுஸ்திரேலிய மண்ணிற்கு அழைத்து வருகின்றமை மிகப்பெரிய ஆபத்தான தீர்மானம் என அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Australia comment Sri Lankan refugees