விக்கினேஸ்வரனே இனவாதம் கக்குபவர் தமிழ் மக்கள் இல்லை! ராஜித சேனா­ரட்ன கடுப்பு!

0
459

முல்­லைத்­தீ­வில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் முன்­னெ­டுக்­க ப்­பட்­ட­மைக்­கு­ரிய சாட்­சி­யங்­கள் இருந்­தால் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அர­சு­டன் பேச்சு நடத்­த­வேண்­டும். அதை விடுத்து இன­வா­தம் கக்­கிக் கொண்­டி­ருக்­கக் கூடாது. இவ்­வாறு அமைச்­ச­ரும், அமைச்­ச­ர­வைப் பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்­தார். North Chief Minister Vigneswaran Statement Tamil News

அரச தக­வல் திணைக்­க­ளத்­தில் நேற்று இடம்­பெற்ற, அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு கூறி­னார்.

அவர் தெரி­வித்­த­தா­வது- “வடக்கு மாகாண சபை­யின் ஊடாக முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் தனது மக்­க­ளுக்கு எத­னை­யும் செய்­ய­வில்லை. தற்­போது வடக்­கில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் நடக்­க­வில்லை. எமது அரசு அவ்­வாறு எது­வும் செய்­ய­வில்லை. இந்த நிலை­யில் அவர் இன­வா­தத்தை கையில் எடுத்­துள்­ளார்.

வடக்கு மக்­கள் உண­வுக்­காக அல்­லா­டு­கின்­ற­னர். ஆனால் முத­ல­மைச்­சர் விக்­னேஸ் வ­ரன் இரா­ணுவ நினை­வுத் தூபியை அகற்­று­வது தொடர்­பில் பேசிக் கொண்­டி­ருக்­கின்­றார். அங்­குள்ள மக்­கள் அது தொடர்­பில் பேச­வில்லை. விக்­னேஸ்­வ­ர­னுக்கு தற்­போது தேவைப்­ப­டு­வது இன­வா­தம் மாத்­தி­ரம்­தான்.

வடக்­கில் காணி­கள் முழு­மை­யாக விடு­விக் கப்­ப­ட­வில்லை. இழப்­பீடு வழங்­கப்­ப­ட­வில்லை. காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பிரச்­சினை, அர­சி­யல் கைதி­கள் பிரச்­சினை என்று அந்த மக்­க­ளுக்கு பல பிரச்­சி­னை­கள் உள்­ளன.

கொழும்பு அரசு வடக்கு மாகாண சபைக்கு வழங்­கு­கின்ற நிதி முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. செயற்­றி­றன் அற்ற மாகாண சபை­யின் செயற்­பாட்டை மூடி மறைக்க இன­வாத ஆயு­தத்தை வடக்கு முத­ல­மைச்­சர் கையில் எடுக்­கின்­றார். மக்­கள் ஆத­ரவை இழப்­ப­தால், அவர் இன­வா­தத்தை எடுக்­கின்­றார் – என்­றார்.

அமைச்­ச­ர­வை­யின் மற்­றொரு இணைப் பேச்­சா­ளர் கயந்த கரு­ணா­தி­ல­க­வும் கருத்­துத் தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது,

வடக்கு, கிழக்­கில் பௌத்த சின்­னங்­கள் அழிக்­கப்­ப­டு­கின்­றன என்று தெரி­விக்­கப்­ப­டு­வ­தில் உண்­மை­யில்லை. தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தி­னர் அதனை உரிய முறை­யில் பேணிப் பாது­காக்­கின்­ற­னர். வடக்கு மக்­க­ளுக்கு இரா­ணுவ நினை­வுத் தூபி தற்­போது பிரச்­சி­னை­யல்ல. அவர்­க­ளின் பிரச்­சி­னை­கள் வேறு. வடக்கு மக்­கள் இரா­ணு­வத்­தின் சேவை­கள் தொடர்­பி­லேயே நல்­ல­வி­த­மா­கப் பேசு­கின்­ற­னர்“ என்­றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites