அரசிற்குள் இ.தொ.கா இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களின் தேவைகள் பூரத்தியாக்கும் – ஆறுமுகன் தொண்டமான்

0
488
Ceylon workers congress helps public anytime sri lanka tamil news

(Ceylon workers congress helps public anytime sri lanka tamil news)

கடந்த மூன்று வருட ஆட்சி காலத்தில் எதிர்கட்சியில் இருந்தாலும் கூட அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கின்றார்களோ அதை எமது மலையக மக்களுக்கும் நாம் வழங்கி வருகின்றோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு மூலமாக வீடுகளை கட்டிக்கொடுத்து வருகின்றோம், மேலும் பல திட்டங்கள் மக்களுக்கு செய்து கொடுக்கப்படுகின்றது.

சிலர் குறை சொல்லி காலத்தை கொண்டு செல்வார்கள். அவர்களுக்கு இது ஒரு தொழிலாக மாறிவிட்டது. எந்த மேடையிலும் சரி அறிக்கைகளிலும் சரி, ஆறுமுகன், காங்கிரஸ் என்று குறிப்பிட்டு குறைகூறாவிட்டால் அவர்களுக்கு அரசியல் செய்ய முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

கட்சியின் பொது செயலாளர் பதவியை இராஜினாமா செய்து, தலைவர் பதவியை மாத்திரம் தக்கவைத்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களின் பேசிய போதே அவர் இந்த கருத்துக்களை வௌியிட்டார்.

காங்கிரஸின் மீது அவதூறுகளையும் குறைகளையும் கூறாவிட்டால் சில அரசியல்வாதிகளுக்கு முன்னேற முடியாது. கடந்த 75 வருடங்களாக ஆலமரம் போல் காங்கிரஸ் தலைநிமிர்ந்து நிற்கின்றது.

அன்று காங்கிரசின் மூத்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் வாக்குரிமையை பெற்றுக் கொடுக்காமல் இருந்திருந்தால் இவர்கள் அனைவரும் வீதியில் தான் நின்றிருப்பார்கள்.

இந்த உண்மையை ஜீரணிக்க முடியாத சிலரும், இளைஞர்களும் தெரிந்தும், தெரியாமலும் இருக்கின்றார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

(Ceylon workers congress helps public anytime sri lanka tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:thileepan,thileepan,