தேர்தலை விருப்பு வாக்கு மூலம் நடத்தும் எண்ணம் எங்களுக்கு கிடையாது: பைசர் முஸ்தபா!

0
670
Sri Lanka Freedom Party intend run election

{ Sri Lanka Freedom Party intend run election }
மாகாண சபைத் தேர்தலை புதிய முறையில் அல்லாமல் கறைபடிந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையின் கீழ் நடத்தும் எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என மாகாண உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விருப்பு தேர்தல் முறை நாட்டிற்கு பொருத்தமற்றது. தத்தமது கிராமத்திற்கும் தொகுதிக்கும் பொறுப்புக் கூறக்கூடிய பிரதிநிதி ஒருவரைத் தெரிவு செய்யும் முறையொன்று அத்தியாவசியம் என அமைச்சர் குறிப்பிட்டார்.

மாகாணசபை எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சகலரும் தம்மைப் பதவி விலகுமாறு நிர்ப்பந்திப்பதாகவும் ஆனால் தாம் சட்ட திட்டங்களின் அடிப்படையில் செயற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: Sri Lanka Freedom Party intend run election

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites