{ 102 human remains Mannar Sados }
மன்னார் ‘சதோச’ வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொண்ட சமயத்தில் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாகத்தில் இன்று திங்கட்கிழமையுடன்(27) 58ஆவது தடவையாக அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
குறித்த அகழ்வு பணியானது கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மதியத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை (27) வழமை போல் விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.
இது வரை குறித்த வளாகத்தில் 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 95மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு சுமார் 440ற்கும் மேற்பட்ட பைகளில் இலக்கம் இடப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற பாதுகப்பில் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக அப்புறப்படுத்தப்படும் மனித எச்சங்கள் குறித்த வளாகத்திலேயே சுத்தப்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டுகின்றது.
இந்த நிலையில் கடந்த ஒரு சில நட்களாக வானிலை மாற்றம் காரணமாக மழை பெய்யும் என்பதால் குறித்த வளாகத்தின் முன் பகுதியானது முழுவதும் தறப்பாள் இடப்பட்டு மூடப்பட்டுள்ளது.
தற்போது வளாகத்தின் மையப் பகுதியில் உள்ள மனித எச்சங்களே மீட்க்கபட்டு வருகின்றது.
மேலும், மழை பெய்யும் பட்சத்தில் குறித்த வளாகமானது முழுமையாக மூடப்படும் நிலை ஏற்படும் என தெரிய வருகின்றது.
Tags: 102 human remains Mannar Sados
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- உடல் உறுப்புக்களைப் பொருத்தும் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடைபெறுகின்றது: சுகாதார அமைச்சு!
- வியட்னாமில் இன்று ரணில் பங்கேற்கும் இந்து சமுத்திர மாநாடு!
- கணவரை மருத்துவமனையில் அனுமதித்த சில நொடியில் கணவருடன் இவ்வுலகை விட்டு பிரிந்த மனைவி!
- மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது: மர்ம நபர்களினால் தாக்கப்பட்ட பூங்காவின் அதிகாரிகள்!
- கோட்டா உள்ளிட்ட 07 பேருக்கு அழைப்பாணை!
- ஞானசாரவுக்கு பொதுமன்னிப்பு?
- நில மீட்புப் போராட்டத்துக்கு மாவை அழைப்பு!
- குடும்ப விபர அறிக்கை பெறும் நடவடிக்கை இரத்து?