மாகாண சபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக்கூடாது -சபாநாயகர்

0
709
Provincial Council election can postponed Speaker

மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கைக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்காமையால் சபாநாயகர் அரசியலமைப்புக்கு அமைய செயற்படுவது அவசியமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.Provincial Council election can postponed Speaker

இது பற்றி பாராளுமன்ற குழு நிலைக் கூட்டத்தில் நேற்று (24) விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

எந்தக் காரணத்திற்காகவும் மாகாண சபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக்கூடாது என சபாநாயகர் கரு ஜயசூரிய இதன் போது வலியுறுத்தினார்.

கட்சித் தலைவர்களுக்கு மேலதிகமாக தேர்தல்கள் ஆணைக்குழு எல்லை நிர்ணய ஆணைக்குழு என்பனவற்றின் தலைவர்களுடன் சபாநாயகர் இதன் போது கலந்துரையாடினார்.

சபாநாயகரால் பிரதமர் தலைமையில் பெயரிடப்படவிருக்கும் குழு இந்தப் பரிந்துரையில் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் வழங்குமாயின் அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான முழுமையான ஆதரவை வழங்குவதாக கட்சிகளின் தலைவர்கள் அறிவித்தார்கள்.

இதற்கமைய கட்சிப் பிரதிதிநிதிகளின் அங்கீகாரத்துடன் ஐந்து பேர் அடங்கிய குழுவை சபாநாயகர் அறிவிக்க இருக்கிறார். பிரதமர் தவிர்ந்த குழுவில் அங்கம் வகிக்கவிருக்கும் ஏனைய உறுப்பினர்கள் துறைசார் புத்திஜீவிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

tags :-  Provincial Council election can postponed Speaker

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites