ஒட்டுசுட்டான் கிளைமோர் மீட்பு : மேலும் ஒரு முன்னாள் போராளி கைது!

0
771
Oddusuddan Explosive Found Ex LTTE Militants Arrested

ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Oddusuddan Explosive Found Ex LTTE Militants Arrested Tamil News

இவர்கள் நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி கிளிநொச்சி சாந்தபுரம் 8 ஆம் வீதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் ஒட்டுசுட்டான் பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா காவல் துறை முச்சக்கரவண்டி ஒன்றை வழிமறித்து சோதனையிட முற்பட்ட போது, சாரதியும் மற்றொருவரும் அதிலிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதன் பின்னர் முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது, அதற்குள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, புலிக் கொடி மற்றும் 20 கிலோ எடையுடைய கிளைமோர் குண்டு என்பன மீட்கப்பட்டன.

பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல் துறை இருவரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites