கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோட்டர் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். Jaffna Train Accident Killed Two Young Men Tamil News
இந்த சம்பவம் சாவகச்சேரி, சங்கத்தானை புகையிரத கடவையில் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு 7 மணி அளவில் இந்த கொடூர விபத்தில் . மட்டுவிலைச் சேர்ந்த மார்க்கண்டு சுலக்சன் (வயது22) மகாதேவா சுஜீவன் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
இரவு 7 மணி அளவில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் சங்கத்தானைப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
புகையிரத கடவையில் பொருத்தப்பட்டுள்ள சமிஞ்ஞை விளக்கு எரிந்து கொண்டிருந்த போதும், புகையிரதம் அண்மித்த தூரத்தில் வரும் போது, அதிவேகமாக புகையிரத கடவையினை கடக்க முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரு துண்டுகளாக உடல் பிரிந்த இளைஞரின் சடலத்தினை சாவகச்சேரி வைத்தியசாலையில் புகையிரத பணியாளர்கள் ஒப்படைத்துள்ளனர்.
மற்றைய இளைஞரின் சடலத்தினை பொது மக்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இரு சடலங்களையும் ஒப்படைத்த பின்னர் சுமார் 1 மணித்தியாலயம் தாமதித்தே புகையிரதம் யாழ். புகையிரத நிலையத்தினை நோக்கிப் புறப்பட்டது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்பு செயலாளர் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு
- யாழ். போதனா வைத்தியசாலை கழிவு நீரால் கடல் வளங்கள் அழியும் அபாயம்
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்