கலைஞர் நினைவிடத்துக்கு அமைதிப் பேரணி:களத்தில் இறங்கிய அழகிரி

0
473

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அவரை கட்சியில் சேர்ப்பதாக இல்லை என்று ஸ்டாலின் முடிவொடு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி தனது ஆதங்கத்தை விரைவில் அவரது ஆதரவாளர்கள் மூலம் தெரிவிக்க உள்ளதாக கூறியிருந்தார்.

மேலும் , அழகிரி செப்டம்பர் 5ஆம் தேதி அமைதிப் பேரணி நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது அது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து, அழகிரி கூறியதாவது கருணாநிதி நினைவிடத்துக்கு வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி  அமைதிப் பேரணி நடக்கிறது. இதில் 75 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள்.

அதுமட்டுமல்லாமல் ,கருணாநிதியின் உண்மை தொண்டர்கள் என் பக்கம் உள்ளார்கள் என்பதை நீருபித்து காட்டுவேன். தனிக்கட்சி பற்றி கேட்டு வருகிறார்கள். கருணாநிதி என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள் நினைவில் இருக்கின்றன.

அதை வெளியில் கூற முடியாது. அவர் எப்படி நினைத்தாரோ அப்படி செயல்படுவேன் என்றுதெளிவுபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :