யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் வீதியில் வைத்தியர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. Jaffna Doctor House Attack Mistakenly Done Tamil News
தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு வைத்தியரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரின் வீடாகும்.
தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்.
இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்குவில் சம்பியன் லேனில் உள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்தது.
தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் இமானுவேல் சாந்தகுமார், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அத்துடன், வைத்தியருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலைக் கண்டித்தும் குற்றவாளிகளை நீதியின் முன் முற்படுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஆரம்ப விசாரணைகள் தொடர்பில் பொலிஸார் தெரிவித்ததாவது:
யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் வைத்தியர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு வைத்தியரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரின் வீடாகும்.
முகப்புத் தோற்றளவில் வைத்தியரின் வீடும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த வீடும் ஒரே மாதிரியானவை. அதனால்தான் வைத்தியரின் வீட்டின் மீது தாக்கிவிட்டு கும்பல் தப்பித்துள்ளது.
தாக்குதலுக்கு இலக்கு வைத்த வீடு, கடந்த மாத இறுதியில் கொக்குவிலில் இடம்பெற்ற வாள்வெட்டுக் குழுவின் அடாவடிகளை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருடையது.
ஆவா குழுவுக்கும் அதற்கு எதிரான கும்பலுக்கும் இடையிலான மோதலின் தொடர்ச்சியே இந்தத் தாக்குதலாகும்.
தாக்குதல் நடத்தியவர்கள் சாதாரண டிலக்ஸ் மோட்டார் சைக்கிள்களிலேயே வந்துள்ளனர்.
தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர், என்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அரசாங்கத்திடம் இருந்து முஸ்லிம்களைப் பிரிக்க தீய சக்திகள் முயற்சி
- ஞானசார தேரருக்கு இன்று சத்திரசிகிச்சை
- யாழில் பொலிஸாருக்கு சவால் விட்ட ரௌடிக் கும்பல்; மீண்டும் அட்டூழியம்
- சிவனொளிபாதம் புத்தரின் பாதமானது; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- கிளிநொச்சி மாணவி பலி; இருதயத்தில் கிருமித் தொற்று காரணம்
- கேரளா மக்களுக்காக தமிழ் நாட்டு சிறுவர்களின் வியப்பூட்டும் இளகிய மனம் (காணொளி இணைப்பு)
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்