ஒரு மருத்துவமனையின் ஐசியூவில் பணிபுரியும் 16 தாதிகள் ஒரே நேரத்தில் கருவுற்றிருக்கும் அதிசயம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. 16 nurses working same hospital same time pregnant tamil news
அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள பேனர் டெசர்ட் மெடிக்கல் சென்டர் என்ற மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) பணிபுரியும் 16 தாதிகள் ஒரே நேரத்தில் கருவுற்றிருப்பது தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் பணிபுரியும் கருவுற்ற தாதிகளுக்குள் பேசிக்கொள்வதற்காக ஒரு பேஸ்புக் குரூப் தொடங்கப்பட்டபோது, ஐசியூவில் மட்டும் 16 தாதிகள் கர்ப்பமாக இருப்பது தெரிந்திருக்கிறது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஒரு தாதி, “நாங்கள் குடித்த தண்ணீரில் ஏதோ இருந்திருக்க வேண்டும்” என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார். இன்னொருவர், “நாங்கள் எல்லோருமே லீவு கிடைக்கும் என்பதற்காக திட்டமிட்டுதான் இதற்கு ஏற்பாடு செய்தோம்.” என்றிருக்கிறார்.
இவர்கள் அனைவரும் அக்டோபர் முதல் ஜனவரிக்குள் குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்று கருதப்படுகிறது.
tags :- 16 nurses working same hospital same time pregnant tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- உலகம் முழுவதும் சுனாமி தாக்கும் அபாயம் – நிபுணர்கள் எச்சரிக்கை
- பசிபிக் பெருங்கடல் பகுதியில் பிஜி தீவின் அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 8.2 ஆக பதிவு!
- தாயை இழந்த குழந்தைக்காக, பெண்ணாக மாறிய தந்தை!
- டென்மார்க்கில் ஆண்டுதோறும் இரத்த சிவப்பாக மாறும் கடல்
- அடர்ந்த காட்டுக்குள் தவறிய குழந்தை 3 நாட்களின் பின்பு மீட்பு
- இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்ததில் 35 பேர் பலி
எமது ஏனைய தளங்கள்