இன்று கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

0
584

நீர்வழங்கல் குழாய்களில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாக இன்று (17) கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. Colombo Water Supply Interrupted Alert Message Tamil News

இன்று 17 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் நாளை 18 ஆம் திகதி அதிகாலை 03.00 மணி வரை 18 மணிநேரம் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில், களனி, வத்தளை மற்றும் பியகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் எனவும் சபை அறிவித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites