ரணில் தலைமையில் 10 இலட்சம் காணி உறுதி வழங்கும் திட்டம் இன்று ஆரம்பம்!

0
624

இன்று முதல் 10 இலட்சம் காணி உறுதி வழங்கும் திட்டத்தை துரிதப்படுத்தியுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். Sri Lanka Government 1 Million Land Deed Issuing Plan Starts Today Tamil News

நல்லாட்சி அரசாங்கத்திற்கு 3 வருடங்கள் நிறைவடைவதையொட்டி நாடுபூராவும் உள்ள காணியில்லாத மக்களுக்கு காணி உறுதி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

திட்டத்தின் முதலாவது நிகழ்வு இன்று (16) இரத்தினபுரியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளதாவது,

10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் எமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக காணி உறுதி வழங்கும் திட்டம் மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் 3 வருட நிறைவுடன் பல மாவட்டங்களில் காணி உறுதி வழங்க இருக்கிறோம்.

அடுத்த நிகழ்வு, நாளை(17) மொனராகலையிலும் 18 ஆம் திகதி கேகாலையிலும் 21 ஆம் திகதி காலியிலும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites