மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்

0
1025
Sudden fear devotees Mannar Madhu Temple Feast

மன்னார் மடுத் திருத்தலத்தில் நேற்று நற்கருணை ஆராதனை நடைபெற்று முடிந்த நிலையில், கடும் மழை பெய்தமையினால் பக்தர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (Sudden fear devotees Mannar Madhu Temple Feast)

கடந்த 2007 ஆம் ஆண்டு ஆவணி உற்சவத்தின் இதேநாளில் மடுத் தேவாலயத்தில் கடும் வெள்ளம் வந்திருந்தது.

இந்த நிலையில், நேற்றைய தினமும் கடும் மழை பெய்தமையினால் பக்தர்களின் அச்சத்திற்கு உள்ளாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடு அன்னையின் வருட உற்சவமான ஆவணி உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில், இலங்கை முழுவதும் இருந்து இலட்சக்கணக்காண பக்தர் செல்வதுடன், வாடி அமைத்து தங்கியுள்ளனர்.

இந்த நிலையிலே சில மணிநேரம் மழை பெய்துள்ளது, இதானால் மடுவில் பக்தர்களிடையே அச்ச நிலை தோன்றியுள்ளது.

கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான குறித்த பெருவிழா இன்று காலை திருவிழா திருப்பலி நடைபெற்றதுடன், குறித்த ஆவணி உற்சவம் நிறைவடையவுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Sudden fear devotees Mannar Madhu Temple Feast