இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்ததில் 35 பேர் பலி

0
301
 bridge collapsed Italy killing 35 people tamil news

இத்தாலி நாட்டின் வடமேற்கில் மலைகள் சூழ்ந்த பகுதியில் ஜெனோவா நகரம் அமைந்துள்ளது. மலைகளுக்கு இடையில் கொன்கிரீட் தூண்களை அமைத்து அவற்றின் மீது உருவாக்கப்பட்டுள்ள வீதிகள் வழியாகதான் இங்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இடையில் சில வாய்க்கால் மற்றும் கால்வாய் பாலங்களும் உள்ளன. bridge collapsed Italy killing 35 people tamil news

இந்நிலையில், ஜெனோவாவில் 10ஏ தேசிய நெடுஞ்சாலையில் மொராண்டி என்னும் 200 மீட்டர் நீள பாலம் உள்ளது. இதன் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து, 100 அடி கீழே இருந்த புறநகர் ரெயில் பாதை மீது விழுந்தது. இந்த அதிர்வு காரணமாக அருகில் இருந்த கட்டிடங்களும் இடிந்து விழுந்தன.

அப்போது ரெயில்பாதையையொட்டி சென்ற கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் இதன் இடிபாடுகளில் சிக்கின. இதனால் வாகனங்களில் சென்றவர்கள், கட்டிடங்களில் இருந்தவர்கள் மற்றும் அப்பகுதியில் நடமாடியவர்கள் என 35 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். 25–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

tags :- bridge collapsed Italy killing 35 people tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்