ஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்

0
373
Germany Ready Deport Bin Laden Security tamil news

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க கடற்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.Germany Ready Deport Bin Laden Security tamil news

இவரது பாதுகாவலர் தான் சமி ஏ என்பவர். இவர் துனிசியா நாட்டை சேர்ந்தவர். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக ஜெர்மனியில் தஞ்சம் பெற்றுள்ளதோடு, தனக்கு குடியுரிமை வழங்கும்படி அந்நாட்டு அரசை கோரியுள்ளார்.

ஆனால் இவர் ஒரு பயங்கரவாதி எனக் கூறி அவருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் உதவி தொகையாக இவருக்கு மாதம் 1200 யூரோ வழங்கப்படுகிறது.

மேலும் அவரை கடந்த மாதம் நாடு கடத்த ஜெர்மனி அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் சொந்த நாட்டுக்கு திரும்பினால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அவர் தெரிவித்ததால் வர் தொடர்ந்தும் ஜெர்மனியில் தங்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் அவரை தொடர்ந்தும் ஜெர்மனியில் தங்க அனுமதிக்க முடியாது என்றும் அவர் ஒரு பயங்கரவாதி எனத் தெரிந்தும் நாட்டில் தங்க வைத்திருப்பது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கருதுகிறார். எனவே அவரை கட்டாயமாக நாடு கடத்துவதற்கான அனுமதி மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பிரதமர் ஏஞ்சலா.

tags :- Germany Ready Deport Bin Laden Security tamil news
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்