எந்தவொரு நபரும் எந்தவொரு நேரத்திலும் போராட்டங்களை நடத்த முடியும் எனவும் அவர்களை வெள்ளை வான்களில் தூக்கிச் சென்று கொலை செய்ய மாட்டோம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Prime Minister Ranil Wigramasinga Parliament Speech Tamil News
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
இந்தக் காலத்தில் எந்தவொரு நபருக்கும் எந்தவொரு காலத்திலும் வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்த முடியும். நாடாளுமன்றிற்கு எதிரில் வந்தும் போராட்டங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போராட்டம் நடத்துவோரை வெள்ளை வான்களில் தூக்கிச் சென்று நாம் கொலை செய்வதில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான இந்த அரசாங்கம் ஜனநாயகத்தை சரியான முறையில் அமுல்படுத்தும் ஓர் அரசாங்கமாகும்.
எனவே, வேலை நிறுத்தப் போராட்டங்கள் மற்றும் போராட்டங்களுக்கு எதிர்ப்பை வெளியிடப் போவதில்லை. நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளதனை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்