மட்டக்களப்பு இளம் ஊடகவியலாளர் கொழும்பில் காலமானார்

0
727
Batticaloa young journalist passed away Colombo

இளம் கலைஞரும் ஊடகவியலாளருமான மட்டக்களப்பின் மாணிக்கவாசகம் விஜயரூபன் தனது 34 வயது வயதில் காலமானார். (Batticaloa young journalist passed away Colombo)

மட்டக்களப்பைச் சேர்ந்த இவர், கொழும்பில் உள்ள தனது தங்குமிடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கல்லடியை சேர்ந்த 34 வயதுடைய மாணிக்கவாசகம் விஜயரூபன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள அரச திணைக்களத்தில் கடமையாற்றும் இவர், தனியார் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், பல்வேறு துறைசார் கலைஞராகவும் அண்மைக் காலமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை தனது பணிக்காக அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Batticaloa young journalist passed away Colombo