ஓட்டமாவடி ஆற்று பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

0
667

மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி தியாவட்டவான் பள்ளிவாசலுக்கு அண்மித்த ஆற்றுப் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது. Batticaloa Oddamavadi River Area Dead Body Found Tamil News

இதனைக் கண்டவர்கள் உடனடியாக வாழைச்சேனைப் பொலிசாருக்கு அறிவித்ததற்கமைய பொலிசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்..

முதற்கட்ட விசாரணையில் குறித்த சடலமானது உள்ளூரைச் சேர்ந்த ஒருவரினுடையதல்ல என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites