“சேரிப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே நோக்கம்” கோத்தாபாய உருக்கம்!

0
571

சேரி வீடுகளை நீக்கிவிட்டு கொழும்பு நகரத்தை முன்னுதாரணமிக்க நகரமாக மாற்றியமைப்பது தனது வேலைத் திட்டங்களின் நோக்கமாக இருந்தது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ கூறியுள்ளார். Former Defence Secretary Gotabaya Latest Statement

வௌ்ளவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த கோத்தாபாய ராஜபக்ஷ இது தொடர்பில் தெரிவிக்கையில்,

“மகிந்த ஆட்சி காலத்தில் கொழும்பு நகரத்தில் வசிக்கின்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வீடுகளை வழங்கி அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே நோக்கமாக இருந்தது.

ஆனால் தற்போதைய அரசாங்கம் மக்களின் வாழ்வாதார திட்டங்களில் எந்த அக்கறையும் கொண்டிருக்கவில்லை.

மாறாக அவர்களின் வாழ்க்கை செலவை அதிகரித்து அவர்களை இன்னலில் தள்ளியுள்ளனர்”என அவர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites