அராலியில் தொடரும் மர்ம சம்பவங்களால் பீதியில் மக்கள்!

0
740

அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் அராலியை அண்டிய பிரதேசங்களில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாகவும், அவர்கள் இரவு வேளைகளில் வீடுகளுக்குக் கற்களால் எறிவதாகவும் வீட்டு யன்னல்கள் மற்றும் கதவுகளைத் தட்டுவதாகவும் மக்கள் தெரிவித்திருந்தமை அறிந்ததே. Jaffna People Fearing Unknown Tragedy Tamil News Latest

இந்நிலையில் , அராலி மேற்குப் பகுதியிலுள்ள வீட்டு வேலிக்கு நேற்று நள்ளிரவு தீ மூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்கே தீ மூட்டப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்குத் தீ மூட்டப்பட்டுள்ளதுடன், அயலிலுள்ள அவரது தம்பியின் வீட்டு யன்னல்களை சிலர் தட்டி விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அராலிப் பகுதியில் அண்மைக்காலமாக அட்டகாசம் புரியும் குள்ள மனிதர்களின் செயற்பாடாகவே இருக்கும் என்றும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவம் குறித்து வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites