மத்தல விமான நிலையத்தில் நடந்த அதிசயம்!

0
748

நேற்றுப் பிற்பகல் மத்தல விமான நிலையத்தில் உலகின் இரண்டாவது பெரிய சரக்கு விமானமான, அன்ரனோவ் ஏஎன்-124 ருஸ்லான் தரையிறங்கியது. World’s Second Large Cargo Flight Landed Mattala Airport Tamil News

இந்தோனேசியாவில் இருந்து மஸ்கட் செல்லும் வழியிலேயே இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியது. இன்று அதிகாலை 1.40 மணியளவில், மஸ்கட் நோக்கி புறப்பட்டுச் செல்லத் திட்டமிட்டிருந்தது.

எரிபொருள் நிரப்புவதற்காகவும், விமானப் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காகவுமே இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய விமானங்களில் ஒன்றான ஏஎன்-124 கனரக மற்றும் பருமமான சுமைகளை ஏற்றுவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை விமானம் இலங்கையில் தரையிறங்குவது இதுவே முதல்முறையாகும்.

கடந்த ஏப்ரல் 19ஆம் நாள் உலகின் மிகப் பெரிய சரக்கு விமானமான ஏஎன்-225 மத்தல விமான நிலையத்தில் தரித்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites