நல்லாட்சி கப்பல் 75 வீதம் மூழ்கிவிட்டது! ரோஹித்த அபேகுணவர்தன கிண்டல்!

0
830
Sri Lanka Opposition Party Rohitha Abeygunawardena Statement

நல்லாட்சி என்ற கப்பல் 75 வீதம் கடலில் மூழ்கிவிட்ட நிலையில் எஞ்சிய 25 வீதமும் மூழ்குவதற்கு முன்னர் அங்குள்ள அனைவரும் தம்முடன் இணைந்துகொள்வார்கள் என்று ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். Sri Lanka Opposition Party Rohitha Abeygunawardena Statement Tamil News

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரசாங்கத்திலிருந்து அண்மையில் விலகிய 16 உறுப்பினர்கள் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே ரோஹித்த அபேகுணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் யார் தம்மை தலைவர்களாக காட்டிக்கொண்டாலும், இறுதியில் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் ரோஹித்த அபேகுணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி என்ற கப்பலில் மிகப்பெரிய துளையொன்று விழுந்துவிட்டதாகவும் எனவே அந்தத் துளையை அடைப்பதற்கு தற்போது கடுமையாக முயற்சிப்பதாகவும் ரோஹித்த அபேகுணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites