மட்டக்களப்பில் தனியார் வகுப்புக்கு சென்ற மாணவி சடலமாக மீட்பு!

0
636
american girl death police suspect murder Lankan latest news chilaw

நேற்று இரவு மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 16 வயதான பாடசாலை மாணவியொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். Batticaloa 16 Years Girl Student Found Dead Body Tamil News

மட்டக்களப்பு பகுதியில் சிறுமிகள் தங்கும் விடுதியிலிருந்து தனியார் வகுப்புக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற பாடசாலை மாணவி ஒருவரே வேறு கிராமத்து வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தை உடற்கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் நாவற்கேணி – மயில்வாகனம் வீதியில் வசிக்கும் செல்வேந்திரன் நிரோனிகா எனும் 10ம் தரத்தில் கற்கும் மாணவி ஆவார்.

இவர் நேற்று பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதாகக் கூறிவிட்டு விடுதியை விட்டு சென்ற நிலையில் வேறொரு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites