யாழ்ப்பாணம் கைதடி வடக்கிலுள்ள வர்த்தக நிலையங்களுக்குள் முகங்களை மூடிக்கொண்டு நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்த இருவரை வாளால் வெட்டியுள்ளனர். (sword attack incident Kaithady Tension area)
இந்த வாள் வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகிய ஒருவர் நேற்றிரவு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி கைதடி வடக்கில் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கைதடியிலுள்ள உப தபாற்கந்தோருக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையத்தில் இருவர் பொருட்கள் கொள்வனவு செய்துகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் திடீரென சென்ற 8 பேர் கொண்ட குழுவின் 04 பேர் வீதியில் சென்றவர்களை தாக்கியுள்ளனர்.
ஏனைய நான்கு பேர் கடைக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொருக்கிச் சேதப்படுத்தினர். கடையின் உரிமையாளரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.
கடையில் பொருட்களைக் கொள்வனவு செய்து கொண்டிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
வீதியில் சென்றுகொண்டிருந்த இளைஞன் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதும் அவர் தனது மோட்டார் சைக்கிளை கைவிட்டு விட்டு ஓடித் தப்பியுள்ளார்.
சில நிமிட நேரம் அங்கு நின்று அட்டகாசம் செய்த வாள்வெட்டுக் குழு அங்கிருந்து சென்றதுடன், பொலிஸாருக்கு இதுகுறித்து முறைப்பாடு செய்யப்பட்டது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கொழும்பில் இன்றைய தினம் மின்சாரத் தடை
- பிரதமர் நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; sword attack incident Kaithady Tension area