லண்டனின் மேற்கு ஹாம்ப்ஸ்டட் பகுதியில் உள்ள 5 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் தீ மளமளவென பரவத் தொடங்கியது. இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் வழங்கப்பட்டது. உடனடியாக, சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். London apartment Large fire accident
அதேசமயம், குடியிருப்பில் வசித்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் அவசர அவசரமாக வெளியேறி உயிர்தப்பினர்.
தீ சூழ்ந்த அறையில் சிக்கிக்கொண்ட 2 நபர்கள் மட்டும் கிரேன்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். பின்னர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். குறித்த நேரத்தில் மக்கள் வெளியேற்றப்பட்டதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். முதலில் 4-வது தளத்தில் தீப்பிடித்து, மேல் தளத்திற்கும் பரவியிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேல் தளம் சேதமடைந்து, கூரை இடிந்து விழும் ஆபத்து இருப்பதாகவும் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
tags :- London apartment Large fire accident
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- இங்கிலாந்தில் குழந்தை மீது ஆசிட் வீசிய தந்தை
- தாய்லாந்து சிறுவர்களை காப்பாற்றிய இங்கிலாந்து நீச்சல் வீரர்களை சந்தித்த பிரதமர்
- விக்கிலீக்ஸ் அசாஞ்சேவை கைது செய்ய பிரிட்டன் முடிவு
- சமையல் மூலம் மன உளைச்சலை குறைத்துகொள்ளும் பிரிட்டன் பிரதமர்
- இங்கிலாந்தில் 3 வயது சிறுவன் மீது ஆசிட் வீச்சு
- மேகன் மெர்க்கல் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு விதிமுறைகள்