பிரிவெனா மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

0
696
15 year old student sexually abused teacher

பௌத்த மாணவர்கள் கல்விகற்கும் பிரிவெனா பாடசாலையில் கல்விகற்று வந்த 15 வயது மாணவன் ஒருவன், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். (15 year old student sexually abused teacher)

குறித்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதான சந்தேகத்தின் பேரில் அந்த பிரிவெனாவில் கல்விகற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை அக்மீமன பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த ஆசிரியர் ஆங்கில ஆசிரியராக பயிற்சி வகுப்புகள் நடத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் ஆங்கில பயிற்சி வகுப்பு ஆசிரியரின் இல்லத்தில் தங்கியிருந்தே இந்த பிரிவெனாவிற்கு கல்விகற்கச் சென்றுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் இந்த ஆசிரியரால் குறித்த மாணவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கல்விகற்பதற்கு பிரிவெனாவிற்கு செல்லவதற்கு மறுப்புத் தெரிவித்த இந்த மாணவன் தனது தகப்பனிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார்.

இதன்பின்னர் இந்த மாணவனின் தந்தை அக்மீமன பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, பொலிஸார் குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளதுடன், அவரை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியிருந்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags;15 year old student sexually abused teacher