மிட்டாய் கொடுத்து 06 வயது சிறுமி துஷ்பிரயோகம்; 22 வயது இளைஞன் கைது

0
759
06 year old girl abuse

வலஹந்தூவ தோட்டத்தில் வசித்துவந்த ஆறு வயது சிறுமிக்கு மிட்டாய் மற்றும் இனிப்புவகைகள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 22 வயது இளைஞனை அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளனர். (06 year old girl abuse 22 year old youth arrested)

இந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குறித்த நபர் கொழும்பில் அச்சிடும் நிறுவனமொன்றில் தொழில் புரிந்து வருகின்றார்.

இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ஊருக்கு செல்வதாகவும் இவ்வாறு ஊருக்கு இம்முறை சென்ற போதே 06 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த சிறுமியின் தாய் தேயிலை கொழுந்து பறிக்கச் சென்றிருந்த போது, தந்தை குறித்த சிறுமியை தனிமையில் விட்டுச் சென்ற நிலையில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி சந்தேக நபரை அக்மீமனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், காலி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 06 year old girl abuse 22 year old youth arrested