03 வயது சிறுவனின் காலை முறித்த தந்தை ; குளியாப்பிட்டியவில் கொடூரம்

0
466
Father attack three year old boy

03 வயது 9 மாதமுடைய சிறுவனின் கால் ஒன்று முறியும் வரை தாக்கிய தந்தையை 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிடிய நீதவான் உத்தரவிட்டுள்ளார். (Father attack three year old boy)

மேலும் குறித்த சிறுவன் தொடர்பாக மருத்துவ அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சிறுவனின் தாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் படி இந்தச் சிறுவனின் தகப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான சிறுவன் சிலாபம் பிரதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தேசிய வைத்தியம் செய்வதற்காக வைத்தியசாலையில் இருந்து இந்தச் சிறுவனை அழைத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Father attack three year old boy