ஐஸ் போதைப் பொருட்களுடன் இந்தியப் பிரஜை கைது

0
623
06 suspects arrested connection possession drugs Nuwaraeliya police

சட்டவிரோதமான முறையில் ஐஸ் எனப்படும் போதைப் பொருட்களுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (Indian citizen arrested ice drugs)

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட இந்தியரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் 50 வயதுடைய இந்தியாவை சேர்ந்தவர் என்றும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடம் இருந்து சுமார் 96 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் எனப்படும் போதைப் பொருட்களை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Indian citizen arrested ice drugs