“ஏன் விடுதலைப்புலிகள் வேண்டும்?” விளக்கம் அளித்தார் விஜயகலா!

0
580
vijayakala maheshwaran again action research order parliament order

விடுதலைப் புலிகளை மீளுருவாக்குவதே தமது இலக்கு என்ற அடிப்படையில் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தென்னிலங்கையில் பெரும் அரசியல் சர்ச்சையை உண்டாக்கியிருந்தது. Mp Vijayakala Maheswaran Explains LTTE Controversial Statement

இது தொடர்பில் ஐதேக பலவழிகளில் ஆராய்ந்து வருகின்றது, மேலும் சிங்கள அரசியல் வாதிகள் இது தொடர்பில் பல தரப்பட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய தேசிய கட்சி நான்கு உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமித்திருந்தது. இந்த குழு விஜயகலா மகேஸ்வரனிடம் விளக்கம் கோரி சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பி இருந்ததுடன், இதற்கு 20ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கி இருந்தது.

எனினும் நேற்று முன்தினம் மாலை விஜயகலா மகேஸ்வரன் தமது சட்டத்தரணி ஊடாக விளக்கக் கடிதத்தை குறித்த குழுவிற்கு அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கில் நிலவுகின்ற நிகழ்கால பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் தொடர்பில் ஏற்பட்ட ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே தமது கருத்து அமைந்திருந்ததாக அவர் தமது விளக்கக்கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்த விளக்க கடிதத்துக்கு ஐதேக விசாரணை குழுவின் பதில் எவ்வாறு அமைந்துள்ளது என இதுவரை தகவல் எதுவும் வெளிவரவில்லை.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites