கிருஸ்ணா படுகொலை : கொலையாளி அடையாளம் காணப்பட்டார் :

0
542
CMC Krishna Shooting Arrest

கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ் கே கிருஷ்ணாவின் எஸ்.கே.கிருஷ்ணாவை சுட்ட துப்பாக்கிதாரி ஒரு ஒப்பந்த கொலையாளி என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.(death penalty ranil wickremesinghe)

எஸ்.கே.கிருஷ்ணா கடந்த 9 ஆம் திகதி செட்டியார் தெருவில் உள்ள அவரது கடைக்குள் நின்றுகொண்டிருந்த போது காலை 7.20 மணியளவில் மர்ம நபர் ஒருவரால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் குறித்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட விசேட பொலிஸ் குழு சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி குறித்த கொலையாளி ஆயுதங்களை இயக்குவதில் தேர்ச்சி பெற்றவர் எனவும், இவர் ஒரு ஒப்பந்த கொலையாளி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிதாரியின் அடையாளம் மற்றும் பெயர் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி இன்னும் ஒரு வாரத்திற்குள் அவரை கைது செய்ய முடியும் என்றும் பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த கொலை தொடர்பில் இதுவரை 15 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கொலைக்கான காரணத்தை கண்டறிய மூன்று பிரதான கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:death penalty ranil wickremesinghe,death penalty ranil wickremesinghe,death penalty ranil wickremesinghe,