யாசகம் பெற்ற 15 பேர் கைது

0
310

புகையிரதத்திற்குள் அனுமதி இன்றி யாசகம் பெற்ற மற்றும் வியாபாரம் செய்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். railway station arrest fifteen beggars Lanker Tamil news colombo

கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.

புகையிரத கட்டளைச் சட்டத்தின் கீழ் பயணிகளை அசௌகரியப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாக அந்த திணைக்கம் கூறியுள்ளது.

புகையிரத்திற்குள்ளும் புகையிரத நிலையங்களிலும் பயாசகம் பெறுதல் மற்றும் வியாபாரம் செய்வது ஜூலை மாதம் 01ம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற முறைப்பாடுகளை 0112 33 66 14 என்ற இலக்கத்தின் ஊடாக புகையிரத பாதுகாப்பு பிரிவுக்கு அறிவிக்கலாம் என்று புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.
railway station arrest fifteen beggars Lanker Tamil news colombo

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites