மக்களின் மனங்களில் இருந்து புலிகளின் ஞாபகத்தை நீக்க… : சிறிதரன் கூறியதாக சிங்கள ஊடகம் தகவல்

0
683
sritharan mp jaffna

வடக்கில் மக்கள் மனங்களில் இருந்து விடுதலைப் புலிகளின் ஞாபகத்தை நீக்க வேண்டுமாயின் இராணுவத்தினர் வடக்கில் நிர்மாணித்துள்ள போர் வெற்றி சம்பந்தமான சகல நினைவு ஸ்தூபிகளும் அகற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளதாக தெற்கின் சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.(sritharan mp jaffna)

போரில் காணாமல் போன நபர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் நடத்தி வரும் தொடர் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற போதே சிறிதரன் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்கள், விடுதலைப் புலிகள் மறக்க வேண்டுமாயின் போர் வெற்றி தொடர்பான அனைத்து சின்னங்களும் அகற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:sritharan mp jaffna,sritharan mp jaffna,sritharan mp jaffna,