புலிகளுக்கு ஆதரவான மனநிலையை மாற்ற யாழ் விரையும் அமைச்சர்கள்!

0
450

விடுதலைப்புலிகள் ஆதரவு மனோநிலை வடக்கில் மீண்டும் தலை தூக்குவதை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காக சட்டமொழுங்கு அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் ஆகியோர் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர். Ministers Team Visits Jaffna Discuss LTTE Support Situation

பொலிஸ்மா அதிபருடன் நானும் யாழ் செல்லவுள்ளேன் என சட்டமொழுங்கு விவகாரங்களிற்கான பிரதியமைச்சர் நளின் பண்டார ஜயமக இதனை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ள வன்முறைகள் மற்றும் மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் ஆதரவு மனோநிலை அதிகரித்துள்ளமை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காவே வடக்கிற்கு செல்லவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் உள்ள மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் ஆதரவு மனோநிலை காணப்படுகின்றது அதனை கூடியவிரைவில் மாற்றுவோம் என தெரிவித்துள்ள பிரதியமைச்சர் இது சுலபமல்ல ஆனால் நாங்கள் அதனை செய்வோம் விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்க அனுமதிக்கமாட்டோம் இந்த விடயத்தில் தொடர்புபட்ட அனைத்து நபர்களுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இதற்கு தீர்வை காணமுயல்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை