(tamilnews sea street shooting krishna major drugs suspect ruwan)
கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான கிருஷ்ணபிள்ளை கிருபானந்தனின் மரணம் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த 24 மணிநேரத்துக்குள் ஒரே பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அவற்றில் ஒன்று புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டியார் தெருவில் பழக்கடை ஒன்றுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான 40 வயதுடைய எஸ்.கே.கிருஷ்ண என்பவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இவர் மீது கஞ்சா போதைப் பொருள் வியாபாரம் தொடர்பில் இரண்டு வழக்குகள் காணப்படுகின்றன.
இதில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்ட இவர் தற்போது பிணையிலிருந்த நேரத்திலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
இவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் போதைப்பொருள் வியாபாரத்தை மையப்படுத்தியே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
எவ்வாறாயினும் மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரின் வழிக்காட்டலின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாராலும், புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழான குழுவொன்றும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
(tamilnews sea street shooting krishna major drugs suspect ruwan)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாலியல் சித்திரவதைக்குள் ஈழ அகதிகள்; அமெரிக்கா அதிர்ச்சித் தகவல்
- சமூக ஒற்றுமையே பலமான ஆயுதம்; சதிகளை முறியடிப்போம்
- யாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்
- வவுனியாவில் தொடரும் வாள்வெட்டு; 10 பேர் கைது
- பாடசாலை செல்ல மாட்டோம்; கால்களை ப்ளேட்டால் வெட்டிய மாணவர்கள்
- ஆற்றுப் பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு; நோர்வூட்டில் பதற்றம்
- பெண் பொலிஸின் கையை கடித்த கிராம சேவகர்
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்