இராணுவமே எங்கள் தாய் மண்ணை விட்டு வெளியேறு – யாழ். கோட்டையில் மக்கள் ஆர்ப்பாட்டம்!!

0
380
massive protest launched land army belonging Archaeological Department

(massive protest launched land army belonging Archaeological Department)

தேசிய தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான கோட்டைப் பிரதேசத்தில் உள்ள காணியை இராணுவத்துக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அங்கு இராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வலியுறுத்தி யாழ்ப்பாண கோட்டையின் தெற்குவாசல் பக்கமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “எங்கள் மண்ணை விட்டு இராணுவமே வெளியேறு, நில ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணையுங்கள், வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் ஏந்தி கோஷங்களை நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன், மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி சுகாஸ் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரிதிநிதிகள், கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

(massive protest launched land army belonging Archaeological Department)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :