(Mahinda Rajapaksa voices Vijayakala Maheswaran claim gov)
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு விஜயகலா மஹேஸ்வரன் வெளியிட்ட ஆவேசக் கருத்துக்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் இயலாமையையே சுட்டிக்காட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்பதையே விஜயகலாவின் கருத்துக்கள் எடுத்துக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
முத்தியங்கன ரஜமஹா விகாரையில் வைத்து செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே முன்னாள் ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று விஜயகலா மகேஸ்வரன் கூறி இருக்கின்ற விடயம் பிழையானது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆனால், அந்த கூற்றின் பின்னணியில் சொல்லப்படாத விடயம் ஒன்று உள்ளது.
அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய போலி உறுதிமொழிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்பதை அவரின் கருத்து வெளிப்படுத்துகிறது.
அரசாங்கம் நாட்டின் அனைத்து மக்களையும் ஏமாற்றியுள்ளது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், அரசாங்கத்தின் இயலாமையாலேயே நாட்டில் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(Mahinda Rajapaksa voices Vijayakala Maheswaran claim gov)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாலியல் சித்திரவதைக்குள் ஈழ அகதிகள்; அமெரிக்கா அதிர்ச்சித் தகவல்
- சமூக ஒற்றுமையே பலமான ஆயுதம்; சதிகளை முறியடிப்போம்
- யாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்
- வவுனியாவில் தொடரும் வாள்வெட்டு; 10 பேர் கைது
- பாடசாலை செல்ல மாட்டோம்; கால்களை ப்ளேட்டால் வெட்டிய மாணவர்கள்
- ஆற்றுப் பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு; நோர்வூட்டில் பதற்றம்
- பெண் பொலிஸின் கையை கடித்த கிராம சேவகர்
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்