(Lalith Dowalakala said one knew sorrows soldiers next president)
படையினரின் இன்ப துன்பங்களை அறிந்த ஒருவரே அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும் என்று முன்னாள் மேஜர் ஜெனரல் லலித் தவுலகல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றி்ல் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
2015 ஆம் ஆண்டு பல உறுதிமொழிகளை வழங்கிய பின்னரே இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தது.
ஆனாலும், அந்த உறுதிமொழிகளை எந்தவகையிலும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முனையவில்லை. அத்துடன் பொதுமக்கள் மேலும் பல சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
ஆனாலும், 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னரும் நான்கு முறை தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் எழுந்து நிற்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருந்த போதும், அப்போதைய அரசாங்கம் அவற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தியது.
தற்போதும், வடக்கில் பல பகுதிகளில் விடுதலைப்புலிகளின் உடைகள் ஆயுதங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
அவை தொடர்பான எந்தவித தகவல்களும் எங்களுக்கு தெரியாது.
அரசாங்கம் அரசியல்வாதிகளின் வேண்டுகோளுக்காக இராணுவத்தினரிடம் உள்ள காணிகளை பறித்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் 35000 இராணுவத்தினர் இருக்கின்றனர். அவர்கள் வானத்திலா வசிப்பது. இவை பற்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இராணுவத்தினர் 22 வருடங்கள் சேவை முடிந்த பின்னர் ஓய்வு பெறுகின்றனர்.
அப்போது, அவர்களுக்கு 45 வயதாகிவிடும். அவர்களின் குடும்ப தேவைகள் அப்போதுதான் கூடுதலாக இருக்கும். ஆனாலும், அந்த காலத்தில் அவர்களின் வேதனம் மூன்றில் இரண்டாக குறைந்திருக்கும்.
இதனைப் புரிந்து கொண்ட கடந்த அரசாங்கம் எவன்காட் போன்ற நிறுவனங்கள் மூலம் 8000 இராணுவத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கியிருந்தது.
தற்போது அவை இல்லாமல் போய்விட்டது.
இந்தநிலையில், இன்னும் ஒன்றரை வருடத்தில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இராணுவத்தினரின் கஷ்ட நட்டங்களை அறிந்த ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று நாங்கள் நம்புகிறோம் அவர் குறிப்பிட்டார்.
(Lalith Dowalakala said one knew sorrows soldiers next president)
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- பிரபல சகோதரமொழி பாடகி படுகொலை
- மூத்த தமிழ் அரசியல்வாதி வேலனை வேணியன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவிப்பு!
- மூத்த தமிழ் அரசியல்வாதி வேலனை வேணியன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவிப்பு!
- உல்லாசத்தின்போது திடீர் வலிப்பு ஏற்பட்டு காதலன் மரணம்; துக்கத்தில் காதலியும் தற்கொலை
- பிக் பாஸ் 2 பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பகீர் தகவல்..!
- தலைவலி காரணமாக திருமணமான 4 நாளில் கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி
- அனுமனும் மயில்ராவணனும் : திரை விமர்சனம்..!
- அதிகார வெறியில் அ.தி.மு.க ஆட்சி! – எதிர்த்துக் குரல் கொடுக்க திரள்கிறது! சி.பி.எம்..!
- கேரள மாநிலக் கல்லூரிகளில் திருநங்கையர்களுக்கு இட ஒதுக்கீடு…!
- ஒழுங்காக விசாரணைக்கு வர வேண்டும்! – எஸ்.வி.சேகரை கண்டித்த நீதிபதி…!
- விவசாயப் பொருள்களின் விலைகள் உயர்வு! – மோடி அரசின் அறிவிப்புகள்! (விவரம்)
- தள்ளுபடியாகும் கர்நாடக விவசாயிகளின் ரூ.34 ஆயிரம் கோடி! – குமாரசாமி அறிவிப்பு!
- பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம்! – விஜய் டிவி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு!
- சேலம் 8 வழிச்சாலைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? “பியுஷ் மனுஷ்” அதிர்ச்சி தகவல்! (காணொளி)
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
- Tamilnews.com
- Timetamil.com
- Gossip.tamilnews.com
- Sports.tamilnews.com
- World.tamilnews.com
- Cinema.tamilnews.com
- Srilanka.tamilnews.com