தனியார் பஸ் உரிமையாளரிடம் லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு 40 ஆண்டுகள் சிறை

0
482
Western provincial road passengers declared guilty 08 crimes

(Western provincial road passengers declared guilty 08 crimes)

வீதிப் போக்குவரத்து அனுமதியை வழங்குவதற்காக தனியார் பஸ் உரிமையாளர் ஒருவரிடம் இருந்து லஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டு உட்பட 08 குற்றங்களில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மேல் மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் முகாமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தண்டனை 05 ஆண்டுகளில் முடிவுறும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுதவிர, பிரதிவாதிக்கு 40,000 ரூபா அபராதம் மற்றும் அவர் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட 10,000 ரூபாவுக்கு தண்டனையாகவும் பெற்றுக் கொள்ள நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் பஸ் உரிமையாளருக்கு 05 இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Western provincial road passengers declared guilty 08 crimes)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites