ஜே.ஆர் ஆட்சிக்கு ஏற்பட்ட நிலைமையே இந்த ஆட்சிக்கும் ஏற்படும் : ரணில்

0
484
J. R. Jayewardene ranil

நாட்டின் அபிவிருத்திகளைக் கொண்டுச் செல்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சியும் அவமானத்துக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானது என்பதை குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , எனினும் அந்த ஆட்சி, வெற்றியிலேயே முடிவடைந்தது என்றும் அவர் கூறினார்.(J. R. Jayewardene ranil)

எனவே, அதேநிலைமை​யே, இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பியமகவில், புதிய பிரதேச செயலக அலுவலகம் ஒன்றை நேற்று (06) திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விமர்சனங்கள் அவமானங்கள் வந்தாலும், அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:J. R. Jayewardene ranil,J. R. Jayewardene ranil,J. R. Jayewardene ranil