கொலை குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்ற மத்திய அமைச்சர்

0
466
incident happened occasion people beef traders tamilnews

incident happened occasion people beef traders tamilnews

மாட்டிறைச்சி வியாபாரியை அடித்துக்கொன்ற 8 பேரை மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா மாலை அணிவித்து வரவேற்ற சம்பவம் நடந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார்க் மாவட்டம் ஹசாரிபாக் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாட்டிறைச்சி வியாபாரியான அலிமூதின் அன்சாரி,55 என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார்.

அவரை பசுப் பாதுகாப்பு படையினர் சிலர் காரை வழிமறித்து அலிமூதினை தாக்கி, தரதரவென இழுத்துச் சென்று அடித்தே கொன்றனர். பின்னர் காரை தீவைத்து கொளுத்தினர்.

நாட்டையே அதிர வைத்த இந்த சம்பவத்தில் 11 பேருக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது. இதில் 8 பேர் கடந்த ஜூன் மாதம் ஜாமின் பெற்று வெளியே வந்தனர்.

பசுபாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவிகள் கொல்லப்படுவதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என பிரதமர் மோடியே பேட்டியளிக்கும் நிலைக்கு சென்றது.

இந்நிலையில் நேற்று ஹசாரிபாக் பகுதியில் மத்திய அமைச்சர் ஜெயந்த்சின்கா இல்ல நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற 8 குற்றவாளிகளையும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

ஜெயந்த் சின்கா. அதன் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவியுள்ளன.

கொலை குற்றவாளிகளுக்கு மத்திய அமைச்சர் மரியாதை செலுத்தி வரவேற்றதற்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி தலைவர் ஹே மந்த் சோரன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.

incident happened occasion people beef traders tamilnews

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :