முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர , இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. DayaSiri General Secretary Post
அரசிலிருந்து விலகி எதிர்க்கட்சி வரிசையில் அமந்த 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் தயாசிறி ஜயசேகரவும் ஒருவர்.
பொதுஜன பெரமுன நடத்திய கட்சி சந்திப்புகளில் கலந்துகொண்ட அந்த 16 பேர் கொண்ட குழுவில் ,தயாசிறி அடிக்கடி அவற்றில் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த மாதம் கட்சியின் முக்கிய பதவிகளில் பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டது.
சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளராக ரோஹன லக்ஷ்மன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். துமிந்த திஸாநாயக்க கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.