அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலை குறித்து வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் அவர்களின் கோரிக்கை கடிதத்திற்கு ஜனாதிபதியின் பதில் கிடைக்கப்பெற்றுள்ளது. Tamil Political Prisoner Ananda Sudhakar Issue President Replied Letter
அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாண கல்விச்சமூகத்தால் பெறப்பட்ட மூன்று லட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் கடந்த 18.06.2018 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தன்னுடைய கோரிக்கை கடிதத்தையும் இணைத்து கிளிநொச்சியில் வைத்து கையளித்திருந்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனான்டோ அவர்கள் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்திற்குப் பொறுப்பான மேலதிக செயலாளர் லக்சுமி ஜெயவிக்கிரம அவர்கள் ஒப்பமிட்டு 20.06.2018 திகதியிட்டு மாகாண கல்வி அமைச்சுக்கு அந்தப்பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக்கடிதத்தில் ஜனாதிபதி அவர்களுக்கு இது தொடர்பில் பல வேண்டுகோல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே உரிய கரிசனை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் சரியான சட்ட நடைமுறைகளைப்பின்பற்றி செயற்படுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்விடயம் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதும் மேலதிக தொடர்புகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய வகை எரிபொருள்!
- விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் : விஜயகலா அறைகூவல் (UPDATE 1)
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- ராஜபக்ஷ மீது நியூயோர்க் ரைம்ஸ் போட்ட குண்டு : கொந்தளிக்கிறது கொழும்பு அரசியல்
- விஜயகலா பூகம்பம் : பாராளுமன்றில் வெடித்தது
- விஜயகலா விளக்கமளிக்க வேண்டும் : ஐ.தே.க. கண்டனம்
- விஜயகலாவுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரி அதிரடி உத்தரவு
- விஜயகலாவை தற்காலிக பதவி நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் கோரிக்கை
- மஹிந்தவை மீண்டும் கொட்டிய தேள்!
- மந்திரவாதி என வீட்டிற்குள் நுழைந்து பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய காமுகன்!!! : களுத்துறையில் சம்பவம்…