யாழ்குடா நாட்டில் அதிகரித்துள்ள சமூக சீர்கேடுகள் மற்றும் வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பொலிஸார் மேலதிகமாக அனுப்பட்டுள்ளனர். Other District Extra Police Added Jaffna Special Operation Panel
சமூக சீர்கேடுகளையும் வன்முறைகளையும் கட்டுப்படுத்தும் பொலிஸாரின் நடவடிக்கைக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்று வட மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னான்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டுத் தாக்குதல்கள், பாலியல் பலாத்காரங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் துரிதமாக அதிகரித்துள்ளன.
இந்த சம்பவங்களை கட்டுப்படுத்த விடுதலைப் புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கூறியமை பாரிய சர்ச்சையை தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோரை கைதுசெய்வதற்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் யாழ் பொலிஸாருடன் இணைந்து செயற்பட மேலதிகமாக 100 பொலிஸார் யாழ் மாவட்டத்திற்கு அனுப்பட்டுள்ளனர்.
வன்முறைகளைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாக வட மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வரவழைக்கப்பட்டுள்ள மேலதிக பொலிஸாருக்கான வாகனங்களும் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய வகை எரிபொருள்!
- விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் : விஜயகலா அறைகூவல் (UPDATE 1)
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- ராஜபக்ஷ மீது நியூயோர்க் ரைம்ஸ் போட்ட குண்டு : கொந்தளிக்கிறது கொழும்பு அரசியல்
- விஜயகலா பூகம்பம் : பாராளுமன்றில் வெடித்தது
- விஜயகலா விளக்கமளிக்க வேண்டும் : ஐ.தே.க. கண்டனம்
- விஜயகலாவுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரி அதிரடி உத்தரவு
- விஜயகலாவை தற்காலிக பதவி நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் கோரிக்கை
- மஹிந்தவை மீண்டும் கொட்டிய தேள்!
- மந்திரவாதி என வீட்டிற்குள் நுழைந்து பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய காமுகன்!!! : களுத்துறையில் சம்பவம்…