(disappearance relatives disappeared persons their struggles Vavuniya)
காணாமற் போனோரின் உறவுகள் தமது உறவுகளை மீட்டு தர வலியிறுத்தி வவுனியாவில் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் ஐந்நூறாவது தினத்தை எட்டவுள்ளது.
இந்தப் போராட்டத்தின் ஐநூறாவது நாளை முன்னிட்டு இன்று யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
குறித்த போராட்டத்தில் நல்லூர்க் கந்தன் ஆலய மதிய நேர பூசையின் போது 108 தேங்காய் உடைத்து 50 தீச்சட்டிகளும் எடுக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காணாமற் போனவர்களின் உறவினர்கள் வடக்கு கிழக்கின் பல இடங்களிலும் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்தில் கிளிநொச்சியில் நடைபெறுகின்ற போராட்டம் கடந்த வாரம் 500 நாளை எட்டியிருந்த்து.
அதே போன்று வவுனியாவிலும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டமும் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் ஐநூறாவது நாளை எட்டவுள்ளது.
இந்த ஐநூறாவது நாளை முன்னிட்டே வவுனியா காணாமற் போனோர் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழில் இந்தப் போராட்டமும் ஆலய வழிபாடுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், காணாமற் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் சமூகத்தில் அக்கறை கொண்டிருக்கின்ற பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
(disappearance relatives disappeared persons their struggles Vavuniya)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கணவனைப் பிரிந்த பெண் பேஸ்புக் கள்ளத் தொடர்பால் கொலையுண்ட சோகம்!
- ஜெயலலிதா டாக்டரின் வாக்குமூலத்தால் அவரது மரணம் குறித்து சந்தேகம்
- அரசியலமைப்பை மீறினாரா விஜயகலா? : சட்ட ஆய்வு இதோ..!
- இங்கிலாந்து தொடரிலிருந்து வெளியேறும் இந்திய அணியின் முக்கிய வீரர்
- நவாஸ் சரீபிற்கு 10 ஆண்டுகள் சிறை; மகளுக்கு 7 ஆண்டுகள் சிறை
- அமெரிக்காவில் இன்று முதல் அமுலுக்கு வரும் சீன பொருட்களுக்கான வரி அதிகரிப்பு
- விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் : விஜயகலா அறைகூவல் (UPDATE 1)
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- 225 மில்லியன் டொலரை வழங்கி மத்தல விமான நிலையத்தை பங்கு போடுகிறது இந்தியா
- விஜயகலாவின் பூகம்பம் : பிரதமரின் விசேட உரையால் பாராளுமன்றில் பதற்றம்
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்