(bees attack One victims died Thimbula Pathana Police Division)
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் தொழில் மேற்பார்வையாளராக பணிபுரியும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஐ.தங்கராஜ் (வயது 57) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இந்த சம்பவம் 06.07.2018 அன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் தேயிலை தொழிலில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்களை தேயிலை மலை அடிவாரத்தில் இருந்த குளவி கூடு ஒன்று கலைந்து இரண்டு பேர் குளவிக் கொட்டுக்கு இலக்கானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது கொழுந்து பறிக்கும் பெண் தொழிலாளர்களை பார்வையிடும் மேற்பார்வையாளரான உயிரிழந்த நபரையும், மேலும் ஒரு பெண் தொழிலாளியையும் குளவிகள் கொட்டியுள்ளன.
இதனையடுத்து இவ்விருவரையும் உடனடியாக கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் கினிகத்தேனை தியகல பகுதியில் வைத்து குறித்த ஆண் உயிரிழந்துள்ளார்.
இதன்பிறகு உயிரிழந்த நபரை கினிகத்தேனை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன், பெண் தொழிலாளியை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(bees attack One victims died Thimbula Pathana Police Division)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கணவனைப் பிரிந்த பெண் பேஸ்புக் கள்ளத் தொடர்பால் கொலையுண்ட சோகம்!
- ஜெயலலிதா டாக்டரின் வாக்குமூலத்தால் அவரது மரணம் குறித்து சந்தேகம்
- அரசியலமைப்பை மீறினாரா விஜயகலா? : சட்ட ஆய்வு இதோ..!
- இங்கிலாந்து தொடரிலிருந்து வெளியேறும் இந்திய அணியின் முக்கிய வீரர்
- நவாஸ் சரீபிற்கு 10 ஆண்டுகள் சிறை; மகளுக்கு 7 ஆண்டுகள் சிறை
- அமெரிக்காவில் இன்று முதல் அமுலுக்கு வரும் சீன பொருட்களுக்கான வரி அதிகரிப்பு
- விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் : விஜயகலா அறைகூவல் (UPDATE 1)
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- 225 மில்லியன் டொலரை வழங்கி மத்தல விமான நிலையத்தை பங்கு போடுகிறது இந்தியா
- விஜயகலாவின் பூகம்பம் : பிரதமரின் விசேட உரையால் பாராளுமன்றில் பதற்றம்
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்