தேவையான பொருட்கள்
கரட் – கால் கப் (பொடியாக நறுக்கி, விழுதாக அரைத்து கொள்ளவும்)
வெள்ளம் – கால் கப்
தண்ணீர் – தேவையான அளவு
தேங்காய் பால் – ஒரு கப்
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – இரண்டு டீஸ்பூன்
முந்திரி – பத்து
திராட்சை – ஐந்து
செய்முறை
முதலில், கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் வெள்ளம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
பிறகு, அதில் கரட் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் பால், ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
இப்பொழுது , சுவையான கரட் பாயசம் தயார்…
<<TAMIL NEWS GROUP SITES>>
ஜூரம் வந்தவங்க சீக்கிரம் தேற சுள்ளுனு ரசம்.!
மிருதுவான ரசகுல்லா செய்யலாம் வாங்க!