கரும்புலி நாளில் மில்லரின் நினைவேந்தல் நிகழ்வு யாழில் அனுஷ்டிப்பு

0
848
black tiger day captain miller remember event

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜூலை 05 கரும்புலி நாளான இன்று முதற் கரும்புலி மில்லரின் நினைவு இடத்தில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. (black tiger day captain miller remember event)

மில்லர் தாக்குதல் செய்து வீரச்சாவடைந்த நெல்லியடி மண்ணில் இன்று மதியம் நினைவுகூரல் இடம்பெற்றிருந்தது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, மாவீர்ர் ஒருவரின் உறவினர் தீபச் சுடரை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதற் கரும்புலியாக கப்டன் மில்லர் வீரச்சாவடைந்திருந்தார்.

அவரின் நினவை அனுஸ்டிக்கும் வகையில் புலிகளினால் கரும்புலி நாள் நினைவு கூரப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; black tiger day captain miller remember event